/* */

நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் இயங்காது : ஏன் தெரியுமா?

பொது வேலை நிறுத்த போராட்டத்திலர் பங்கேற்பதால் நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் இயங்காது : ஏன் தெரியுமா?
X

இந்தியா முழுவதும் வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் தனியார் மயம் மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் வங்கி ஊழிர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

இந்த அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசுடமையாக்கப்பட்ட 73 ஆயிரம் வங்கி கிளைகளில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரம் பங்கேற்பார்கள் என்பதால் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்படலாம். இதன் காரணமாக காசோலை பரிவர்த்தனை, ஏ.டி.எம். சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

வங்கிகளை பொறுத்தவரை நாளை இம்மாதத்தின் நான்காம் சனிக்கிழமை என்பதால் விடுமுறையாகும். ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என்பதால் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. எனவே வங்கிகளை நம்பி உள்ள வாடிக்கையாளர்கள் , வியாபாரிகள், தொழில் அதிபர்கள் இன்றே அது தொடர்பான பணிகளை முடித்துக்கொள்வது நல்லது.

Updated On: 25 March 2022 11:03 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா