/* */

தருமபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி

தருமரி மாவட்டத்தில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

Cow Loan | Cow Farming Loan
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட நான்கு இடங்களில் கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே வந்ததாலும், பாதுகாப்பு கருதியும் விநாயகர் சிலைகளை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்துகொண்டே வருவதால் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் விநாயகர் சிலை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

மேலும், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கல் உட்பட தெண்பெண்ணையாறு (இருமத்தூர்) நாகாவதி அணை, தொப்பையாறு அணை ஆகிய நான்கு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Sep 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!