/* */

ஒகேனக்கல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவர் கைது

ஒகேனக்கல் அருகே குடும்பத் தகராறில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஒகேனக்கல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவர் கைது
X

கத்தியால் குத்திக் கொலை செய்ய பட்ட ஜெரினா கைது செய்யப்பட்ட கழில்.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி ஜெரினா, இவருடைய கணவர் கழில். இவர் மீன் வெட்டுதல் மட்டும் ஆயில் மசாஜ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் குடிபோதையில் இருந்த கழில் அவருடைய மனைவி ஜெரினாவை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் ஜெரினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளி கழிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 5 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்