/* */

கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: நடவடிக்கைக்கு விவசாயிகள் வேண்டுகோள்

கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்கக்கோரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்:   நடவடிக்கைக்கு விவசாயிகள் வேண்டுகோள்
X

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி ஊராட்சியில் மஞ்சவாடி,சின்னமஞ்சவாடி, லட்சுமாபுரம், கோம்பூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இவர்களின் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின் பாதைகளில் மின் கம்பங்கள் நீண்ட தொலைவு இடைவெளி விட்டு விட்டுஅமைக்கபட்டுள்ளது.

இதனால் மின் பாதைகளில் மின் கம்பிகள் கைக்கு எட்டுமளவிற்கு தொங்கிச் செல்வதால் மழைகாலங்களில் ஷாக் அடிப்பதாகவும், விவசாய நிலங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக சர்வே எண் 72,73,74 ஆகிய விவசாய நிலங்களில் வழியாக செல்லும் மின் கம்பிகளுக்கு புதிய மின் கம்பங்கள் அமைக்க படாததால் மரக்கொம்பு நட்டு மின் கம்பி தொங்காதாவாறு கட்டப்பட்டுள்ளது. ஆகவே இடைவெளி குறைத்து மின் கம்பங்கள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 19 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?