/* */

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
X

தர்மபுரி மாவட்டத்தில், போட்டியின்று தேர்வான, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 9- ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்றது. மனுக்கள் பரிசீலனைக்கு பின், இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தர்மபுரி மாவட்ட ஊராட்சி 18- வது வார்டு குழு உறுப்பினர் (எஸ்.டி.பொது) பதவிக்கு போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.,அ.ம.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 4 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால் 8 பேர் போட்டியிடுகிறார்கள்.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குட்லனஅள்ளி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த 3 பேரின் மனுக்களும் பரிசீலனைக்கு பின் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு தற்போது யாரும் போட்டியிடவில்லை.

இதேபோல் 12 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 5 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால் பி.கொல்லஅள்ளி- வார்டு எண் 2, பங்கு நத்தம் வார்டுஎண்- 5, மானியத அள்ளி வார்டு எண்- 7, கோட்டப்பட்டி வார்டு எண்- 4, மருதிபட்டி வார்டு எண்- 2, பெரியபட்டி வார்டு எண் - 8, சிட்லிங் வார்டு எண் - 1, ஆர்.கோபிநாதம்பட்டி வார்டுஎண் - 6, மெணசி வார்டு எண்- 8, மூக்காரெட்டிபட்டி வார்டு எண்- 3 ஆகிய 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு, தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்; அந்த 10 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எச்சனஅள்ளி(வார்டு எண் 2)-ல் 2 பேரும், சில்லாரஅள்ளி (வார்டு எண் 2)-ல் 3 பேரும் போட்டியிடுகிறார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 3 பதவிகளுக்கு மொத்தம் 13 பேர் போட்டியிடுகிறார்கள்.

Updated On: 26 Sep 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...