/* */

தேர்தல் தொடர்பான புகார்கள் தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்க கலெக்டர் தகவல்

தேர்தல் தொடர்பான புகார்கள் தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தேர்தல் தொடர்பான புகார்கள் தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்க கலெக்டர் தகவல்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி.

தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், திட்ட இயக்குநர்/உறுப்பினர் செயலாளர், சென்னை, டி.என்.ஹரிஹரன், தேர்தல் பார்வையாளராக (Election Observer) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர் (Election Observer) சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள அரசு கூடுதல் சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிக்கிறார். எனவே ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளரை அவரது முகாம் அலுவலகமான சேலம் கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண்.1 -ல் பிற்பகல் 2மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நேரிலும், 9487935429 கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு