/* */

வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில் தர்மபுரி, தொப்பூர், அதியமான் கோட்டை, மதிகோன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கஞ்சா, குட்கா ஒழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வத்தல்மலை அடிவாரத்தில் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்

அப்போது ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் காரிமங்கலம் அடுத்த மார்க்கம்பட்டி காளப்பனஹள்ளியை சேர்ந்த சேகர் என்கின்ற ராஜசேகர் என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்ததாக கூறினார். இதனை அடுத்து போலீசார் அதிரடியாக அவரது வீட்டை சோதனை செய்து சுமார் 500 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை அதியமான்கோட்டை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 31 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...