/* */

அரூர் அருகே பெண் அடித்துக் கொலை: 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

அரூர் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே பெண் அடித்துக் கொலை: 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வெளாம்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் வயது 41, இவரது மனைவி ராதாமணி, வயது 35, தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்த ராதாமணி கடந்த ஏப்ரல் 6ந் தேதி இரவு தேர்தல் பணிக்கு சென்றுவிட்டு கணவரின் பைக்கில் வந்த போது வெளாம்பள்ளி காட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பேரேரியை சேர்ந்த அவரது தந்தை கோவிந்தன், அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சம்பவ நடந்த நாளான்று மயங்கி விழுந்த ராதாமணியை அவரது கணவர் வெங்கட்ராமன், நாகம்மாள்,ஜடையன், ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், இதனை அந்த வழியாக வந்த செல்வம் என்பவர் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்தபோது, சாதாரண மயக்கம் தான் உடனே எழுந்து விடுவார் என மூவரும் கூறியுள்ளனர். பின்னர் ராதாமணி உயிரிழந்தார்.

அக்கம்பக்கம் விசாரித்ததில், ராதாமணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை வெங்கட்ராமன் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், சம்பவ நாளன்று வெங்கட்ராமன் உள்ளிட்ட மூன்று பேரும் ராதாமணியை அடித்து கழுத்தை நெருக்கி கொலை செய்ததாக கூறியுள்ளார். நீதிமன்ற பரிந்துரைப்படி, அரூர் போலீசார் வெங்கட்ராமன், நாகம்மாள், ஜடையன் மூன்று பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

Updated On: 16 Sep 2021 2:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்