/* */

ஆப்ரேஷன் 2.O தொடரும் கஞ்சா வேட்டை: அரூர் அருகே 2 கிலோ கஞ்சா பதுக்கிய இருவர் கைது

ஆப்ரேஷன் 2.O தொடரும் கஞ்சா வேட்டை -அரூர் அருகே 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆப்ரேஷன் 2.O தொடரும் கஞ்சா வேட்டை: அரூர் அருகே 2 கிலோ கஞ்சா பதுக்கிய இருவர் கைது
X

அரூர் அருகே 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆப்ரேஷன் 2.O மூலம் தமிழகத்தில் ஒரு மாதம் அதிரடியாக கஞ்சா வேட்டையில் காவலர்கள் ஈடுபட வேண்டுமென டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறை‌யின‌ர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரூர் உட்கோட்ட பகுதியில் காவல் துறையினர் தீவர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்பேது கூடலூர் அடுத்த பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில், சுற்றி திரிந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, பாவக்கல் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.20,000 மதிப்புள்ள 2.200 கிலோ கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் அரூர் சிறைச்சாலையில் அடைத்தனர்.

இதேப்போல் பாப்பிரெட்டிபட்டி அடுத்த கோம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கோபால் என்பவரை காவல் துறையினர் கைது செய்து, 100 கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதால், இதற்கு அடிமையான இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களின் இந்த அதிரடி உத்தரவால் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை காவலர்கள் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 31 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...