/* */

'வெளியவா வர்றீங்க..?' : அரூரில் ஊர் சுற்றியவர்கள் வாகனம் பறிமுதல்

தருமபுரியில் முழுஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

வெளியவா வர்றீங்க..? : அரூரில் ஊர் சுற்றியவர்கள்  வாகனம் பறிமுதல்
X

தர்மபுரி மாவட்டம், அரூரில் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார். 

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் முழுஊரடங்கை மீறி வெளியில் இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் திறந்து வைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற நேரங்களில் வெளியில் நடமாடுவதற்கு தடை உள்ளது. அதே போன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரூரில் முழு ஊரடங்கு தினமான இன்று வாகனங்களில் காரணமின்றி வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், அவர்களின் வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டு வருகிறது. எனவே ஊரடங்கின்போது வெளியில் சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 16 May 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?