அரூரில் 1950 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம்
அரூரில், 1950 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போயின; கடந்த வாரத்தை விட பருத்தி விலை உயர்ந்துள்ளது.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில், வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.
பருத்தி ஏலத்தில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 302 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 302 விவசாயிகள் எடுத்து வந்த 1950 பருத்தி மூட்டை ரூ.55 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இதில், ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், வர லட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.6800 முதல் ரூ.7769 வரையில் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, பருத்தி வரத்து குறைந்து. ஆனால் விற்று கூடுதலாக விற்பனையானது. கடந்த வாரம் 2450 மூட்டை பருத்தி ரூ. 62 லட்சத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று 1950 மூட்டை பருத்தி ரூ.55 இலட்சத்திற்கு ஏலம் போனது.