/* */

அரூர்: 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம்

தருமபுரி மாவட்டம், அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் போனது.

HIGHLIGHTS

அரூர்: 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம்
X

தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.

இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் எடுத்து வந்த 3200 பருத்தி மூட்டை ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், வர லட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.6669 முதல் ரூ.7529 வரையில் ஏலம் போனது.

கடந்த வார்ததை விட, விவசாயிகள் வரத்து குறைந்து இருந்தது. ஆனால் பருத்தி வரத்து அதிகரித்தாலும், வாரத்தை விட விலையும் குறைந்து விற்பனையானது. கடந்த வாரம் 3000 மூட்டை பருத்தி ரூ. 75 இலட்சத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் போனது.

Updated On: 13 July 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  6. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  7. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  10. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...