/* */

வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை

வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை

HIGHLIGHTS

வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்த வனத்துறை
X

வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி

தருமபுரி மாவட்டத்தில், அரூர் வருவாய் உட்கோட்டத்தில் அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனங்களில் மான், மயில், முயல், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்டவை உள்ளன. தற்போது நிலவும் கடும் வெயில் மற்றும் வறட்சியால் வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி விலங்குகள் சாலையை கடந்து ஊருக்கு நுழையும். அந்த சமயத்தில் வானகங்களில் அடிப்பட்டு உயிரிழந்து விடுகின்றது. இதனை தடுக்கும் விதமாக மொரப்பூர் வனத்துறை சார்பில், கீழ்மொரப்பூர், கொளகம்பட்டி மற்றும் அரூர் வனச்சரகத்திகுட்பட்ட தோல்தூக்கி, கூக்கட்டப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் செயற்கை முறையில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனத்தைவிட்டு வெளியேறாது என்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியிலேயே தண்ணீர் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 21 April 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்