அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைசங்கத்தில் பருத்தி ஏலம்
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1450 மூட்டை பருத்தி ரூ.49 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.
இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 302 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 260 விவசாயிகள் எடுத்து வந்த 1450 பருத்தி மூட்டை ரூ.49 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், வர லட்சுமி (எம்சிஎச்) ரகம் ரூ.7369 முதல் ரூ.8109 வரையில் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, பருத்தி வாரத்து குறைந்து. ஆனால் சற்று கூடுதலாக விற்பனையானது. கடந்த வாரம் 1950 மூட்டை பருத்தி ரூ.55 இலட்சத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று 1450 மூட்டை பருத்தி ரூ.49 இலட்சத்திற்கு ஏலம் போனது.