/* */

அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு
X

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வாச்சாத்தியை சேர்ந்தவர் மூக்கன் மகன் தர்மலிங்கம்,வயது 50.

இவர் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக தனது இரு சக்கர வாகனத்தில் அரூர் சென்றார். பின்பு மாலை வாச்சாத்தி க்கு செல்ல அரூர்-சேலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கோபிநாதம்பட்டி கூட்ரோட்டை தாண்டி வாச்சாத்தி பிரிவு சாலைக்கு செல்லும்போது எதிரே வந்த கார் தர்மலிங்கம் பைக் மீது மோதியதில் தர்மலிங்கம் பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தர்மலிங்கம் மனைவி ராமாயி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...