மத்திய நிதி திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி மாவட்டத்தில், மத்திய நிதி திட்டத்தின் கீழ்பயன் பெற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில், பழங்குடியினர் நலத்துறை மூலம், மத்திய அரசின் சிறப்பு நிதி உதவித் திட்டம், அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மேம்பாட்டு திட்டம் மற்றும் விரிவான பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெற தருமபுரி மாவட்ட பழங்குடியினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கை: பழங்குடியினர் நலத்துறை மூலம் தர்மபுரி மாவட்டத்திற்கு 2019-2020 மற்றும் 2020-2021-ஆம் ஆண்டிற்கு பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் மைய அரசின் சிறப்பு நிதி உதவித் திட்டம் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மேம்பாட்டு திட்டம் மற்றும் விரிவான பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் கீழ் கீழ்கண்டவாறு திட்டங்களை செயல்படுத்திட ரூ. 72.325 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.