/* */

தர்மபுரி துணிக்கடையில் திடீர் தீவிபத்து: அணைக்க போராடும் தீயணைப்பு துறையினர்

தர்மபுரி துணிக்கடையில் திடீர் தீவிபத்து போராடும் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரி துணிக்கடையில் திடீர் தீவிபத்து: அணைக்க போராடும் தீயணைப்பு துறையினர்
X

கடையில் ஏற்பட்ட தீயைணை அணைக்கும் முயற்சியில் தீயைணைப்புத்துறையினர்.

தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே அப்துல் முஜிப் தெருவில் தனியார் மொத்த ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மாலை 6 மணிக்கு கடை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவு 7. 30 மணி அளவில் திடீரென கடைக்குள் இருந்து புகை வரவே பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் பூட்டுகளை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக பேருந்து நிலைய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறையில் நவீன கருவிகள் இல்லாததால் பூட்டை சுத்தியலால் உடைத்து கடையை திறப்பதில் தாமதமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பவர்புல் டார்ச்லைட் இல்லாததால் இருட்டிலேயே தீயணைப்பு துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் புகையில் செல்லக்கூடிய கவச உடையும் இல்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என தீயனைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 19 Jan 2022 3:15 PM GMT

Related News