/* */

தருமபுரி மாவட்டத்தில் 1.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்

தருமபுரி மாவட்டத்தில் 1.48 லட்சம் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தில் 1.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்
X

போலியோ சொட்டு மருந்து முகாம்.

தர்மபுரி நகராட்சி, பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (27.02.2022) நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். இப்போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திவய்தர்சினி, தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் போலியோ இல்லாத சமுதாயத்தினை உருவக்கிட, போலியோ இல்லாத தமிழகம் என்ற நிலையினை தொடர்ந்து நிலை நிருத்திட மாநிலம் முழுவதும் இன்றைய தினம் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திலும் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றுகின்றது. இதில் அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2021 - ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட 1,53,919 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதுபோலவே இந்த 2022 - ஆம் ஆண்டில் இன்று (27-02-2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்ற தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 1,47,595 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது.

தர்மபுரி மாவட்டத்தில் இப்போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக கிராமப்பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிட தர்மபுரி மாவட்டத்தில் 18 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4080-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரை அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களிலும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிறதுறைசார்ந்த 58வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள், பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே பலமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் இன்றைய தினம் (27-02-2022) நடைபெற்று வருகின்ற தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மேலும் அனைத்து அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தருமபுரி மாவட்டம் போலியோ நோய் இல்லாத மாவட்டமாக தொடர்ந்து இருக்க இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி அவர்கள் தர்மபுரி நகராட்சி, பி.ஆர்.சுந்தரம் தெருவில் உள்ள நகராட்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.செளவுண்டம்மாள், தர்மபுரி வட்டாச்சியர் ராஜ ராஜன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2022 8:00 AM GMT

Related News