Begin typing your search above and press return to search.
தர்மபுரி அருகே லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு
தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இன்று உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தாசநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பாளையம்புதூர் அருகே சாலையை கடக்க முயற்சித்தனர்.
அப்போது பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற பார்சல் லாரி மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஜெயராமன் சிகிச்சையில் உள்ளார். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.