/* */

தர்மபுரி: மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி ஸ்ரீவெங்கட் ரமண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

தர்மபுரி: மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
X

சிறப்பு அலங்காரத்தில் மணியம்பாடி ஸ்ரீவெங்கட் ரமணசுவாமி  உள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தர்மபுரி கோட்டை வரமஹாலக்ஷ்மி உடனாகிய பர வாசுதேவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் விமலா, ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், குமாரசாமிப்பேட்டை சென்னகேசவப் பெருமாள் கோவில், பழைய தர்மபுரி வரத குப்பம் வெங்கட்ரமண சுவாமி கோவில், அதியமான் கோட்டை சென்ராயப் பெருமாள் சாமி கோவில், அதகபாடி லஷ்மி நாராயண சுவாமி கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமணசுவாமி கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் வழியாக சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தேங்காமரத்துப்பட்டி ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவில் ஊர் பொதுமக்கள் சார்பில் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சக்தி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Updated On: 14 Jan 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?