/* */

அரசு வேலை, திருமணம் வேண்டி நடுரோட்டில் இளைஞர் கலாட்டா: தர்மபுரியில் பரபரப்பு

தர்மபுரியில் அரசு வேலையும், திருமணம் செய்து வைக்க வேண்டி போதை இளைஞரின் தர்ணாவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு வேலை, திருமணம் வேண்டி  நடுரோட்டில் இளைஞர் கலாட்டா: தர்மபுரியில் பரபரப்பு
X

தர்மபுரி நான்கு ரோட்டில் குடிபோதையில் கலாட்டா செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் காவேரி.

தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் ஆய்வாளர் சரவணன் , போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் காவேரி (வயது 33 ) என்பது தெரியவந்தது.

காவல் துறையினரிடமும் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது எனக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். இல்லையேல் இங்கிருந்து வரமாட்டேன் என அடம் பிடித்த அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் அந்த இடத்தில் இருந்து அப்புற படுத்திய பின்னரே போக்குவரத்து சீரடைந்தது.

பின்னர் போதை வாலிபரை காவல்துறையினர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்