தர்மபுரியில் பாஜக சார்பில் ஜன சங்க நிறுவனர் பிறந்தநாள் விழா
இதையொட்டி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
HIGHLIGHTS
தர்மபுரியில் பாரதிய ஜனதாகட்சி சார்பில் ஜனசங்க நிறுவனர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி சந்தைப்பேட்டை 4-ஆவது வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜன சங்க நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தர்மபுரி மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் ஐஸ்வர்யம் முருகன் தலைமை வகித்து பண்டிட் தீனதயாள் உபாத்யாய உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில், கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் செல்லபாண்டியன், நகர தலைவர் ஜிம்சக்திவேல், முன்னாள் நகர தலைவர் எம்.சக்திவேல், நிர்வாகிகள் டாக்டர் சுப்பிரமணி, வழக்கறிஞர் கண்ணன், வெங்கடேஷ், வெற்றி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.