/* */

தர்மபுரி அருகே ரூ.4.21 லட்சம் மதிப்பு 162 மூட்டை குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

தர்மபுரி அருகே காரில் ரூ.4.21 லட்சம் மதிப்புள்ள 162 மூட்டை குட்கா கடத்திய தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே ரூ.4.21 லட்சம் மதிப்பு 162 மூட்டை குட்கா பறிமுதல்:  3 பேர் கைது
X
குட்கா கடத்தியதாக கைது செய்யப்பட்ட மூவருடன் போலீசார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே காரில் கடத்திய ரூ.4.21 லட்சம் மதிப்புள்ள 162 மூட்டை குட்கா கடத்தலுக்கு பயன் படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தந்தை மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில், தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில் அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் ரங்கசாமி , உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் பைபாசில் வந்த காரை தடங்கம் பகுதியில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் டிரைவர் மற்றும் உடன் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் (வயது42), இவரது மகனும், டிரைவருமான பிரபாகரன் (23), பிடமனேரியை சேர்ந்த மனோஜ் (22) என்பதும், பெங்களூருவில் இருந்து தர்மபுரி மாவட்டம் பெருமாள் கோவில்மேடு பகுதிக்கு கடத்தியது தெரியவந்தது. அங்குள்ள ஒரு வீட்டில் குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, குட்கா பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து டிரைவர் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ரூ.4 இலட்சத்து 21 ஆயிரத்து 28 மதிப்பிலான 162 மூட்டை குட்கா, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் நேற்று இரவு அதியமான் கோட்டை அருகே அனாதையாக நிறுத்தி இருந்த ஈச்சர் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.3 இலட்சம் மதிப்புள்ள குட்கா இருப்பதை கைப்பற்றி ஈச்சர் லாரியும் பறிமுதல் செய்தனர். யார் நிறுத்தியது யாருக்குச் சொந்தமானது என அதியமான் கோட்டை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 12 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!