/* */

தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
X

தர்மபுரி பத்திரப்பதிவு  அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர்.

தர்மபுரி சாலை விநாயகர் கோயில் தெருவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகம் மூன்று அடுக்கு மாடியில் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

மூன்று மாடி பிரிவு அலுவலகங்களிலும் தற்போது பத்திரப்பதிவு ஆன்லைன் மூலமே நடைபெற்று வருவதால் ரொக்கப் பணம் புழக்கத்திற்கு அங்கு இடமில்லை.

இந்நிலையில் தருமபுரி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளர் இம்மானுவேல் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் தர்மபுரி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டபோது அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.55 ஆயிரம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டு சாார்பதிவாளர் லட்சுமிகாந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று மாலை அலுவலகம் முடியும் தருவாயில் அலுவலகத்திற்குச் சென்ற தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Updated On: 10 Dec 2021 3:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்