/* */

விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகை

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியின மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகை
X

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடி இன மக்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் மங்களூர் ஒன்றியம் சிறுப்பாக்கம் கிராமத்தில் இந்து ஆதியன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சுமார் பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 25ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் தனி வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியரிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் விரக்தி அடைந்த பழங்குடி இன மக்கள் இன்று விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Oct 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?