/* */

விருத்தாசலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தடுப்பு ஆலோசனை கூட்டம்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தடுப்பு  ஆலோசனை கூட்டம்
X

விருத்தாசலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்.

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்வாலோசனைக் கூட்டத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்த்தல்,பொதுமக்களுக்கு விளம்பரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முக கவசம் அணிய வலியுறுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட வலியுறுத்துவது, கொரோனா கவனிப்பு மையம் அமைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசின் ஊரடங்கு விதிமுறைகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில், விருத்தாசலம், திட்டக்குடி,வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வருவாய்த் துறை ,சுகாதாரத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

Updated On: 7 Jan 2022 1:52 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?