/* */

நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டக்குடி விவசாயிகள் கோரிக்கை

திட்டக்குடி வெலிங்டன் பாசன விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டக்குடி விவசாயிகள் கோரிக்கை
X

திட்டக்குடி வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து பிரதான கால்வாய், கீழ்மட்ட கால்வாய் வழியாக 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் வெலிங்டனிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்த நிலையில், இப்பகுதியில் மங்களூர், நல்லுார் ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெல் பயிரிட்டனர்.

முதற்கட்ட அறுவடை முடிந்த நிலையில், தற்போது 2,000 ஏக்கர் நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து போனது.

மழையால் பாதித்த வயல்களை பார்வையிட வந்திருந்த அமைச்சர் கணேசனிடம், சிறுமுளை, வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம், மருதத்தூர், புத்தேரி, தருமகுடிகாடு, தொளார் வடக்கு பகுதியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 6 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  2. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  3. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  4. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  5. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  7. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  8. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  9. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  10. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்