ஆசையாய் பைக் வாங்கிய இரண்டே நாளில் விபத்தில் உயிரிழந்த மாணவர்

திட்டக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டையில் மோதி இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆசையாய் பைக் வாங்கிய இரண்டே நாளில்  விபத்தில் உயிரிழந்த மாணவர்
X

விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளி அருகே எழுத்தூரைச் சேர்ந்த ராமநாதன் மகன் பிரசாந்த்( 22 ). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு வராத்திற்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து சொந்த ஊரான எழுத்தூர் வந்த இவர் தன் அம்மாவிடம் கே.டி.ம் பைக் வாங்கி தரச்சொல்லி தகராறு செய்ததுடன், கொண்டு பைக் வாங்கி தரவில்லை என்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி அடம் பிடித்தாராம். இதையடுத்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புதிய பைக் 3லட்சம் ரூபாயக்கு வாங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு தொழுதூர் நோக்கி செல்லும் போது, தனியார் பள்ளி வளைவில் அதிவேகமாக வளைத்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார், மாணவர் பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா,க திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 5:29 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  2. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  3. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  4. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  5. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  6. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  7. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  8. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  9. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  10. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...