/* */

திட்டக்குடியில் மக்காச்சோளத்தை சாப்பிட்ட 5 மயில்கள் உயிரிழப்பு

திட்டக்குடியில் குருனை மருந்து கலந்த மக்காச்சோளத்தை சாப்பிட்ட 5 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

HIGHLIGHTS

திட்டக்குடியில் மக்காச்சோளத்தை சாப்பிட்ட 5 மயில்கள் உயிரிழப்பு
X

பைல் படம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தில் விவசாய நிலங்களில் மக்காசோளம் விதை விதைத்துள்ளனர். மக்காச்சோள விதைகளை விலங்குகள் சாப்பிடாமல் இருக்க வயல் பகுதியில் குருனை மருந்து போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு வந்த மயில்கள் விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த குருனை மருந்தை தின்றதால் சம்பவ இடத்திலேயே 4 ஆண் மயில், ஒரு பெண் மயில் உட்பட ஐந்து மையில்கள் இறந்தன.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் வனத்துறை அலுவலர்கள் மயில்களை உடற்கூறு ஆய்வு செய்து காப்புக் காட்டில் புதைத்தனர்.

மேலும் விசாரணையில் வயலின் உரிமையாளர் ஆ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (58) விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். வயலில் ஒரே நேரத்தில் 5 மயிலகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 26 Aug 2021 5:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  6. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  7. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  10. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...