/* */

கடலூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீர்வரத்து அதிகமானதால் ஆற்றில் குளிக்கச் சென்ற இரட்டையர் உட்பட 3 பேர்‌ பரிதாபமாக உயிரிழப்பு.

HIGHLIGHTS

கடலூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாதவன், மாளவிகா, லோகேஷ்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாகவும் விழுப்புரத்தில் நேற்று முதல் பெய்து வரும் தொடர்மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது,

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முள்ளிகிராம்பட்டு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் மாதவன் (21)மற்றும் மகள் மாளவிகா (21) இருவருடன் பக்கத்து வீட்டு பையன் லோகேஷ்(16) ஆகிய மூவரும் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில் ஆற்று நீரில் சிக்கியதாக நெல்லிக்குப்பம் காவல் துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லோகேஷ் மாளவிகா ஆகிய இருவரையும் பிணமாக மீட்டனர்.மாதவனை தேடும் பணிகள் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 14 Nov 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்