/* */

பண்ருட்டிபள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை நடத்தினர்

HIGHLIGHTS

பண்ருட்டிபள்ளியில் குழந்தை தொழிலாளர்  முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
X

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை நடத்தினர்

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோ. பூவராகமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் .பெ. சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க மாணவர்களும், பொதுமக்களும் உறுதிமொழியை ஏற்றனர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தில் வேல்முருகன் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட நிகழ்ச்சி குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

நிகழ்வில் இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட துணை கன்வீர் வீரப்பன், தலைமை ஆசிரியர் சீனுவாசன், கிருஷ்ணன், பென்னி, பாலு, ஆனந்த், விஸ்வா, நூர் முகமது , அன்பு தமிழரசன் மற்றும் , பொதுமக்கள் பலர் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வின் நிறைவாக பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

Updated On: 12 Jun 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!