/* */

வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது

வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரைகைது செய்தனர்.

HIGHLIGHTS

வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது
X

வடலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ புகையிலை பொருட்கள்

வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அமலா, பூவராகவன், செந்தில், பாலமுருகன், ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார், அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு சுமார் 500 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வடலூர் கலைஞர் நகர் டேனியல் மகன் இமானுவேல், அவரது மனைவி விஜி மற்றும் கருங்குழியை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் குடோனில் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விஜி, பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 500 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் தலைமறைவான இமானுவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 9:04 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  2. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  3. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  5. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  6. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  7. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  10. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...