/* */

கடலூர் அருகே தறி கெட்டு ஓடிய கார் மோதி 2 பேர் பலி- பரபரப்பு வீடியோ காட்சி

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் பலியானார்கள்.

HIGHLIGHTS

X

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த, நெய்வேலி இந்திராநகர் சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் சென்னையிலிருந்து அக்பர் பாஷா என்பவர், அதி வேகமாக காரினை ஓட்டிக்கொண்டு, தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கார் தனது முழுக் கட்டுப்பாட்டையும் இழந்து, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர்களை தூக்கி எறிந்துவிட்டு, சாலையோரம் பழக்கடை, பூக்கடை வைத்திருந்த நபர்கள் மீது பயங்கரமாக மோதி நின்றது.

இதில் சம்பவ இடத்திலேயே நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் முத்தம்மாள் துடிதுடித்து இறந்தனர். மேலும் கார் மோதியதில் ஜான்சி என்ற சிறுமி உட்பட, ராணி, தங்கம், சின்னசாமி, குமரேசன் ஆகிய ஐந்து நபர்களுக்கு, தலை, கை கால்களில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நெய்வேலி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த கார் டிரைவர் அக்பர் பாஷா உட்பட ஐந்து நபர்களையும் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கார் விபத்தில் உயிரிழந்த வனிதா மற்றும் முத்தம்மாள் உடல்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நெய்வேலி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்விபத்து குறித்து சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது. அதில் அதி பயங்கரமாக வரும் காரானது, சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு பேர்களை தூக்கி வீசிவிட்டு செல்லும் காட்சி நெஞ்சை பதற காட்சியாக அமைந்துள்ளது. இச்சம்பவத்தால் நெய்வேலி பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

Updated On: 20 Feb 2022 3:29 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்