Begin typing your search above and press return to search.
கடலூரில் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கடலூரில் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை
HIGHLIGHTS
கடலூர் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் நிர்மலாதேவி கடலூர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று இரவு வீட்டின் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயில் முன்பய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தலை துண்டான உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கண்டித்ததால் மனம் உடைந்து பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்மியம்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.