/* */

கடலூர் அருகே அதிகரிக்கும் கடல் ஆமைகள் இறப்பு

கடலூர் வெள்ளி கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிகளவில் இறந்து கிடக்கின்றன.

HIGHLIGHTS

கடலூர் அருகே அதிகரிக்கும் கடல் ஆமைகள் இறப்பு
X
கடலூரில் ஆமை இறந்து கிடக்கும் காட்சி.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி ஆமைகள் வருவது வழக்கம்.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் இந்த ஆண்டு பெய்த தொடர்மழை மற்றும் அதிக அளவு நீரோட்ட தாக்கத்தால் ஆமைகள் முட்டை இட வருவது தாமதமானது. இந்நிலையில் முட்டை இடுவதற்காக கடற்கரை வரும் ஆமைகள் சில படகுகளிலும், மீனவர் வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.

இந்த ஆண்டு இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில் கடலூர் சில்வர் கடற்கரை முதல் ராசா பேட்டை கடற்கரை வரை 30க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்துள்ளன. இதைத் தடுக்காவிட்டால் ஆமைகளின் இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மீனவர்களின் நண்பனாக விளங்கும் ஆமைகளை காக்க மீனவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இறந்த ஆமைகளை கணக்கெடுத்து இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவை கடற்கரைகளில் புதைக்கப்பட்டு வருகின்றன.

Updated On: 24 Jan 2022 5:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  2. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  3. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  5. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  6. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  7. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  8. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  9. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  10. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை