/* */

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது,

HIGHLIGHTS

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
X

கடலூர் மாவட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்தர ரெட்டி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர ரெட்டி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் ‌ அனைத்து துறை அதிகாரிகளுக்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இயற்கை பேரிடர்கள் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் 92 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவை என கண்டறியப்பட்டு மழை நீர் வடிய வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் சுரங்கத்தில் தேங்கிய நீரை முழுமையாக வெளியேற்ற கூடாது எனவும், மழை குறைந்த பிறகு ஆறுகள் மற்றும் ஏரிகளில் படிப்படியாக நீரை வெளியேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர ரெட்டி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


Updated On: 6 Oct 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  5. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  6. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  9. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  10. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !