/* */

பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த தாய் உள்பட 4 பேர் கைது

பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த தாய் உள்பட 4 பேர் கைது
X

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் விசூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி அகல்யா (21). இவரது தங்கையான 15 வயது சிறுமியை கடலூர் முதுநகர் சிப்பாய் தெருவைச் சேர்ந்த குணேசகரன் மகன் கருணைஜோதி (28) என்பவருக்கு புதன்கிழமையன்று கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியை அவரது தாய்-தந்தை ஆகியோர் உதவியுடன் மேல்மலையனூருக்கு கடத்திச் சென்று அங்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவரும் மாற்று சமூகத்தினராக உள்ள நிலையில் இத்தகவல் வெளியூரில் உள்ள அகல்யாவிற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, அவர் தனது பெற்றோரிடம் கேட்டபோது திருமணம் செய்து கொண்ட கருணைஜோதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அகல்யாவை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அவர் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணைஜோதி, அவரது தந்தை மா.குணேசகரன் (62),மற்றும் சிறுமியின் தாய்-தந்தை ஆகியோரை கைது செய்தனர். சிறுமியை மீட்டு கடலூரிலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 March 2022 6:01 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு