Begin typing your search above and press return to search.
கடலூரில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை
கடலூரில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீ்ர்ப்பளித்தது.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே ஊரில் கீழ் ஆதங்குடி கிராமத்தில் பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வந்த மணிகண்டன் மீது சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று விசாரணை முடித்து வைத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாலகிருஷ்ணன் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய மணிகண்டனுக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும்,1.50,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.