Begin typing your search above and press return to search.
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்த தடை
பொது இடங்களில் மது அருந்துவது பற்றி தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் எஸ்.பி. கூறி உள்ளார்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கடலூர் மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவின்படி இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது.கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள்.அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் பொது இடங்களில் மது அருந்துவோர் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.