Begin typing your search above and press return to search.
கடலூரில் திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கைது.
HIGHLIGHTS
வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கடலூரில் பந்த் எதிரொலியாக 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடியிருந்தன,
கடலூரில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கடலூர் லாரன்ஸ் சாலை நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்,
அப்போது மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த திடீர் சாலை மறியலால் இரண்டு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது பொது மக்கள் அவதியுற்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.