Begin typing your search above and press return to search.
கடலூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திறந்த எம்எல்ஏ அலுவலகம்.
கடலூரில் கடந்த பத்து ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.
HIGHLIGHTS
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதில் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் முன்னாள் அமைச்சர் சம்பத் அலுவலகத்தை பயன்படுத்தவே இல்லை. இந்நிலையில், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அலுவலகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.