/* */

கடலூர்:மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு

மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூர்:மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு
X

கடலூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்புவது போன்று, போலியாக தயாரித்து, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஒரு வீடியோவை மாரிதாஸ் என்பவர் வெளியிட்டுள்ளார்.இந்த செய்தி போலியானது, இதை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த தனியார் தொலைக்காட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் அங்கு அந்த வீடியோவை நீக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ அவர் முன்வரவில்லை. எனவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வரும் மாரிதாஸ் மீதும், அவரது குழுவினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 27 Sep 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!