/* */

கடலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

இபிஎஸ் ஓபிஎஸ் போட்டியின்றி தேர்வு-பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டம்.

HIGHLIGHTS

கடலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
X

கடலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் அறிவுறுத்தலின்படி எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் தலைமையில் கடலூர் லாரன்ஸ் சாலை நான்குமுனை சந்திப்பு அருகே திரண்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், நகர கழக துணைச் செயலாளர் கந்தன், மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 6 Dec 2021 6:14 PM GMT

Related News