Begin typing your search above and press return to search.
பாரத் பந்த்: கடலூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பாரத் பந்த் காரணமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. நாடு தழுவிய போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
பாரத் பந்த் காரணமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.மேலும் சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் புதுச்சேரி வழியாக செல்ல போக்குவரத்து கழகம் அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து முண்டியடித்துக்கொணடு பொதுமக்கள் பேருந்துகளில் ஏறி பயணம் செய்தனர். இதனால் கடலூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.