Begin typing your search above and press return to search.
கடலூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
கடலூரில் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
HIGHLIGHTS
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம். சி. சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் அ. தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் காசிநாதன், மற்றும் வடக்கு மாவட்ட கழக ,நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.