Begin typing your search above and press return to search.
கடலூர் மாவட்டத்தில் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே1 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்
HIGHLIGHTS
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் மே1 ஆம் தேதியன்று தேசிய அளவில் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ந்தேதி காலை 10 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்திட வேண்டும். இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்