/* */

கடலூர் மாவட்டத்தில் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே1 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம்
X

பைல் படம்

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் மே1 ஆம் தேதியன்று தேசிய அளவில் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ந்தேதி காலை 10 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்திட வேண்டும். இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்

Updated On: 28 April 2022 3:16 PM GMT

Related News