/* */

டாஸ்மாக் கடையில் ஓட்டையைப் போட்டு ஆட்டையை போட்ட 3 பேர் கைது.

திருட்டுச் சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சிக்கியவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில், இருசக்கர வாகனம் பறிமுதல்.

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையில் ஓட்டையைப் போட்டு ஆட்டையை போட்ட 3 பேர் கைது.
X

பின்னலூர் டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு மதுபாட்டில்களை திருடியவர்கள்

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், மூன்று பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த மே மாதம் பின்னலூர் டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு, உள்ளே புகுந்து ரூ.97 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து சேத்தியாத்தோப்பு அடுத்த மருவாய் கிராமத்தை சேர்ந்த கிறிஸ்துராஜ் (வயது 22), சின்னத்தம்பி (49), ஜான் போஸ்கோ (26) ஆகியோர் மூவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 2:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!