/* */

வால்பாறை பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

கோவை மாவட்டம், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வால்பாறை பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
X

வால்பாறையில் உள்ள அரசு பள்ளிகளில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவைக்கு வருகை தந்தார். கோவை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, வால்பாறை பகுதிக்கு சென்ற அமைச்சர், ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளை, அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ், நேரில் ஆய்வு செய்தார். மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில், மாணவர்களுக்கு பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பள்ளிகளின் நிலை, மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து அவர் கேட்டறிந்தார்.

மேலும் பள்ளிகளின் தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் விவரமாக அமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 10 Jun 2021 1:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?