/* */

கோவையில் கொரோனா தடுப்புப்பணிகள் எப்படி? அமைச்சர் பெரியகருப்பன் விசிட்!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து, பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கோவையில் கொரோனா தடுப்புப்பணிகள் எப்படி? அமைச்சர் பெரியகருப்பன் விசிட்!
X

கோவை மாவட்டம் கிட்டாம்பாளையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட. அமைச்சர் பெரியகருப்பன்.

கோவையில் அதிகளவில் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இப்பணிகளை அவ்வப்போது அமைச்சர்கள், உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். கிட்டாம்பாளையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கணியூர் ஊராட்சி அலுவலகத்தில், முன்களப்பணியாளர்கள் 400 பேருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை, அமைச்சர் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக 25 பேருக்கு நிவாரணத்தை அமைச்சர் பெரியகருபாபன் வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jun 2021 1:10 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...