/* */

கொரோனா விதிமீறல்: ஸ்பாவிற்கு சீல் வைத்து கோவை மாநகராட்சி அதிரடி

கோவை பாரதி பார்க் பகுதியில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட ஸ்பாவிற்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

கொரோனா விதிமீறல்: ஸ்பாவிற்கு சீல் வைத்து  கோவை மாநகராட்சி அதிரடி
X

கோவை பாரதி பார்க் பகுதியில், விதிமுறைகளை மீறிய ஸ்பாவிற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

கோவை மாவட்டம் கொரொனா தொற்று பரவலில் தொடர்ந்து தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு 4000 மாக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 1500 க்கு கீழ் வந்துள்ளது.

எனினும் தமிழக அளவில் ஒப்பிடும் போது கொரோனா பாதிப்புகள் அதிகம் என்பதால் , கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றது.

இந்நிலையில் கோவை பாரதி பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் "கீரின் டே ஸ்பா " கொரொனா விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அழகு நிலையத்திற்கு சீல் வைத்தனர். அந்த அழகு நிலைய நிறுவனத்திற்கு 25 ஆயிரம் அபராதமும் மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர். கொரொனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கோவை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Updated On: 17 Jun 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  3. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  9. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது